Sunday 19th of May 2024 05:48:38 PM GMT

LANGUAGE - TAMIL
ஜனாதிபதி செயலகம்
ஊரடங்கு உள்ளிட்ட எந்த முடிவுகளையும்  பிரதேச மட்டங்களில் எடுக்கக் கூடாது!

ஊரடங்கு உள்ளிட்ட எந்த முடிவுகளையும் பிரதேச மட்டங்களில் எடுக்கக் கூடாது!


ஊரடங்குச் சட்டம் உட்பட மக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி செயலகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.

கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியி்ட்டுளள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE